Thursday, July 26, 2012

உன்னைத் தேடியே

 
இன்று உன் முகம்
தேடியே அலைகிறது
பேதை மனது........

எங்கே உடைந்து
நொறுங்கினேன்
தெரியவில்லை.......

உடைந்த என்னை
உயிர்ப்பிக்கும்
சஞ்சீவி மலை நீ........

உன்னைக் கண்டதும்
மார்பில் முகம்புதைத்து
சோகங்களை கண்ணீரால்
கரைக்கவே ஏங்குகிறேன்......

என் வழிப்பாதையெங்கும்
உன் கால் தடத்தையே
துழாவுகின்றன கண்கள்......

மிக அருகில் நீ இருப்பதாய்
மனம் உணர உன்னைத்
தேடியே என் பயணம்.......

No comments:

Post a Comment