Tuesday, April 3, 2012

நடிகனின் மனைவி



அரிதாரம் பூசுகிறாய் தொழிலுக்காய்,
என் அரி என்பதனால் கலங்கினேன்.
பிற மாந்தரை அணைக்கையில்,
மனதில் நானிருப்பேன் என்றிருந்தேன்,
கிசுகிசுவெல்லாம் கண்துடைப்பென்றாய்
கனமும் யோசிக்காமல் நம்பினேன்.

அழகிலும் அறிவிலும்
மிஞ்சலாம் என்றாலும்
உன்மீது கொண்ட
அன்பில் சிறந்தவள்
நானென்று இறுமாந்திருந்தேன்.

எனக்காய் மடலேறவும்
துணிந்தவன் நீ.......
எங்கே இடறினேன்.......
இழந்த பின்
இயலாமையில் தவிக்கறேன்.

உன் அன்பில் திளைத்ததால்
ஆழ்கடலாகிறேன்.
என்னைவிட உன்மேல்
அன்புசெய்ய ஒருத்திவந்ததால்
ஆர்ப்பாட்டம் செய்யாமல்
அமைதியாய் ஒதுங்குகிறேன்.
சுகமாய் நீயிருக்க

மறவாதே என் அன்பே
மகிழ்ச்சியில் உடனில்லாது போனாலும்
சோதனைக் காலத்தில்
நிழல் போல் நானிருந்து
உனைத் தேற்றும் தோழியாவேன்.
 
பிழைக்கத் தெரியாதவளென
பிதற்றுகிறார்கள்
கடலில் கலந்த பிறகு
நதிக்கு சுயமில்லையென்பது
புரியாமல்..............................

No comments:

Post a Comment