வைரத்தை இழந்த
குருடன் போலசிலவற்றை இழந்த பிறகே
இழந்ததின் மதிப்பு தெரிகிறது.
மீட்டு எடுக்க நினைக்கையில்
தன்முனைப்பு தடுக்கிறது
காட்டாற்று வெள்ளமென
சீறும் எண்ணங்களுக்குதடை போட முயற்சித்து
வெடிக்கும் பாறையாய்
சிதறித் தான் போகிறேன்.
எண்ண அலைகளை
அடக்க முயற்சிக்கபெளர்ணமி அலைகளாக
மேலெழும்பி மூழ்கடிக்கிறது.
இதழ்கள் மலர பேசினாலும்
வார்த்தைகள் ஏனோகுளத்தின் பாசி போல
சோகத்தை அப்பிக் கொண்டே
உதிர்கிறது
சோகத்தை மறைக்க
மெளன கவசம் அணிகிறேன்.மணித்துளிகள் நகர
அணலில் இட்ட மெழுகாய்
கவசமும் உருக,
நீர் கசியும் அணையாகிறேன்.
நிலவைச் சிறைவைத்த குளமாய்
எல்லாமே காட்சிப் பிழையாகவேரறுந்த மரமாய்
வீழ்கிறேன் மண்ணில்
செய்வதறியாமல்
இதழ்கள் மலர பேசினாலும்
ReplyDeleteவார்த்தைகள் ஏனோ
குளத்தின் பாசி போல
சோகத்தை அப்பிக் கொண்டே
உதிர்கிறது//நல்ல உவமை..தவிப்புடன் என்றும் இருக்க கூடாது... அதனை தவிர்க்க என்ன செய்யவேண்டுமோ அதற்க்கான சிந்தனையில் மனதை செலுத்தினால் தவிப்பை தவிர்க்கலாம்..