தடயமே இல்லாமல்
நுரையீரல் நிரப்பும் சுவாசம் போல
நானறியாமல் என்னுள்
நிரப்பிச் சென்றாய்
உன் காதலை.
தேரை போல் என் இதயம் புகுந்து
அன்பையும், கோபத்தையும்உணவாக்கி வளர்கிறது உன் காதல்
உன் அன்பில் கரைந்து காற்றாகி
பெரும் ஓசை எழுப்புகிறேன்மூங்கில் காட்டினிலே.....
எனை அழகாய் செதுக்கி
புல்லாங்குழல் இசையாக்குகிறாய்.
உன் அன்பெனும் தேன்குடித்த
வண்டாய் கிறங்கித்தான் கிடக்கிறேன்காம்பாய் எனைத் தாங்குகிறாய் நீ.
மலரின் கனம்தாங்காது சரியும் தண்டாய்
உன் அன்பின் வீரியம் தாங்காதுசரிகிறேன் உன் மார்பினிலே
முட்களான பாதைகளில்
எனை ஏந்திஇரத்தம் வடிக்கிறாய் நீ
உன்னால்
அடைகாக்கப் படுகிறேன்அனுதினமும் அழகாய்.
அடம் பிடிக்கும்
குழந்தையாகிறேன்
உன்னிடம் மட்டும்
சூரிய ஒளி பிரதிபலிக்கும்
நிலவைப் போலஉன் அன்பை தூவுகிறேன்
என் வழியெங்கும்.
உன் அன்பை உரமாய் கொண்டு
என் இலட்சியங்கள்வளர்கிறது செழிப்பாய்.
No comments:
Post a Comment