Tuesday, February 28, 2012

மிகு காதல்


காட்டும் அன்பில்
கூடும் இன்பம்
இதயத்தில் நுழைந்து
மலர்கிறது இதழ்களில்
 

புல்லாங்குழல் புகும் காற்று
இசையாவது போல்
உன் நினைவுகள் என்னுள்
கவியாகிறது


வாலியின் முன் பலம் இழக்கும்
எதிரிபோல
உன்முன் எனை இழந்து
வெற்றுப் படகாகிறேன்


நீர் தேடும் வேரின் தாகம் போல
என் சிந்தனைகள் உனை நோக்கியே
தவம் கொள்கின்றன.
 

கண்ணிமைக்கும் நேரத்தில்
கர்ப்பத்தின் பாதுகாப்பை
தந்தாய் உன் அணைப்பினிலே


பற்ற வைத்த மத்தாப்பாய்
வெடிக்கின்றன் உன் நினைவுகள்
என்னுள்
 

நீயில்லா நொடிகளில்
உன் நினைவலைகள்
எனைத் தின்ன
தேய்ந்து தான் போகிறேன்
என்னுள்ளே


உன் எண்ணங்களுக்காய்
ஏகலைவன் போல்
விரல் தரவும் சம்மதமே.....


No comments:

Post a Comment