காட்டும் அன்பில்
கூடும் இன்பம்இதயத்தில் நுழைந்து
மலர்கிறது இதழ்களில்
புல்லாங்குழல் புகும் காற்று
இசையாவது போல்உன் நினைவுகள் என்னுள்
கவியாகிறது
வாலியின் முன் பலம் இழக்கும்
எதிரிபோலஉன்முன் எனை இழந்து
வெற்றுப் படகாகிறேன்
நீர் தேடும் வேரின் தாகம் போல
என் சிந்தனைகள் உனை நோக்கியேதவம் கொள்கின்றன.
கண்ணிமைக்கும் நேரத்தில்
கர்ப்பத்தின் பாதுகாப்பைதந்தாய் உன் அணைப்பினிலே
பற்ற வைத்த மத்தாப்பாய்
வெடிக்கின்றன் உன் நினைவுகள்என்னுள்
நீயில்லா நொடிகளில்
உன் நினைவலைகள்எனைத் தின்ன
தேய்ந்து தான் போகிறேன்
என்னுள்ளே
உன் எண்ணங்களுக்காய்
ஏகலைவன் போல்விரல் தரவும் சம்மதமே.....
No comments:
Post a Comment