அதிகாலை பனித்துளிகள்
ஆழ்ந்து தன்னுள்ளே விழ
அழகாய் இதழ் விரிக்கவும்,
மஞ்சள் வெயில் மாலையிலே
இதழ் உதிர்க்கவும்
மருகுவதில்லை மலர்கள்
பழுத்த இலைகளை
உரமாக்க உதிர்ப்பதற்கும்
உணவுக்காய் புதிதாய்
இலைகளைத் துளிர்ப்பதற்கும்
சோர்வதில்லை மரங்கள்
நீருக்கு நெடும் பயணம் செய்யும்
வேர்கள் என்றும் கர்வப்பட்டதில்லை
அச்சாணியே தானென்று
வேர்கள் சோர்ந்தாலும்
தாங்கும் விழுதுகள்
இகழ்வதில்லை வேர்களை
எப்பொழுதும்.........
மனிதம் தொலைத்த மனிதன்
ஆர்ப்பரிக்கிறான்
எல்லாச் செயலிலும் தான்
வெறும் இயக்கம் மட்டுமே
என்பதறியாமல்
No comments:
Post a Comment