உன்னைக் காணாது என் உயிர்
மறிப்பதை அறியாயோ...
நகரும் நொடிகள்
என்னுள் உனை
முழுதாய் ஓவியமாக்க,
விழிநீரும் அழிக்காதிருக்க,
விழுங்குகிறேன் புன்னகையால்.
என் செவிகளின் தவம் அறியாதவனா
உன் ஒற்றைச் சொல்லுக்காக
ஓர் உயிர் தவிப்பதை உணராயோ?
நேரமில்லையா? மனமில்லையா
மங்கையிவள் மனதின்
மயக்கம் போக்க
உனக்காய் உயிர் சொட்ட சொட்ட
உருகுவதை அறியாயோ?
தனியாய் தவிப்பதுமேன்
உனக்காய் தோள்
கொடுக்க நானிருக்க
No comments:
Post a Comment