என் கண்வழி உள்புகுந்து
இதயத்தில் சிம்மாசனமிட்டுஎன் உணர்வுகளை ஆள்பவனே
என் உணர்வுகளுக்கு
உயிர்கொடுக்கஉயிர்த்தெழுகிறாய்
எழில்மிகும் ஓவியமாய்
என்னுள்ளே
எனக்கானதை எல்லாம்
உனக்காகவேசாசனமிட்டுத் தருகிறேன்.
ஆதவனின் வெப்பத்தில்
பனியுருகி நதியாவதுபோல்உன் அன்பின் கதகதப்பில்
என் உயிர் உருகி
வழிந்தோடுகிறது
கண்ணீர் துளிகளாய்.
நாள்கணக்காய் பேசித்
தீர்த்த பின்னும்பேசாத உணர்வுகள்
கடலளவாய் மீந்திருக்க
மொத்தமாய் மொழிபெயர்க்கிறேன்
மொழியை ஓர் முத்தமாய்.
ஒலிக்கான வேகத்தை
மனமும் கொள்ளஈடு கொடுக்கத்
தெரியா மொழியோ
மெளனத்தைப் போர்த்திக் கொள்ள,
கருசுமக்கும் தாயாய்
மெளனம் அடர்த்தியாய்சுமந்திருக்கும் நினைவலைகளை
விரல்கள் பிரசவிக்க
உனக்கான கவிக்குழந்தை
அழகாய் இதழ்விரிக்கிறது.
No comments:
Post a Comment