Monday, January 16, 2012

உன்னுள் நான்


என்னவாய் இருக்கிறேன் நான் ! உன்னுள்
என்னவாய் இருக்கிறேன் நான்.

உன் கண்களுக்குள் நிறைந்திருக்கும் பிம்பமாகவா.....
உன் கண்ணீரில் வழிந்தோடும் நிஜமாகவா.....

உன் இதயச் சோலையை நனைக்கும்
அன்பெனும் மழையாகவா......
மலர்களை கொய்தெறியும் சூறை காற்றாகவா.......

என்னவாய் இருக்கிறேன் நான் ! உன்னுள்
என்னவாய் இருக்கிறேன் நான்.

உன் மனப்பூக்களை
சுடு சொற்களால் துவம்சிக்கும் புயலாகவா.....
ஆறுதல் மொழி பேசும் தென்றலாகவா.....

உன் வாழ்க்கை நிலத்தை
மேம்படுத்தும்  உரமாகவா.....
வளம் கொல்லும் திராவகமாகவா....

என்னவாய் இருக்கிறேன் நான் ! உன்னுள்
என்னவாய் இருக்கிறேன் நான்.

வாழ்க்கையைத்  தடம் மாற்றிப் போடும்
சூழ்நிலைகளை கையாளும் அறிவாளியாகவா...
சூழ்நிலை கைதியாகும் முட்டாளாகவா...

உன்னை கைப்பிடித்து அழைத்துச்
செல்லும் அன்னையாகவா......
உன் கரம் பிடித்துச் செல்லும்
பிள்ளையாகவா.....................

என்னவாய் இருக்கிறேன் நான் ! உன்னுள்
என்னவாய் இருக்கிறேன் நான்.

எதுவாகினும் நினைவில்
நிற்பதே நிம்மதி.


1 comment:

  1. என்னவாய் இருக்கிறேன் நான் ! உன்னுள்
    என்னவாய் இருக்கிறேன் நான்.//எண்ணமாய் இருப்பீர்களோ?

    ReplyDelete