என்னவாய் இருக்கிறேன் நான் ! உன்னுள்
என்னவாய் இருக்கிறேன் நான்.
உன் கண்களுக்குள் நிறைந்திருக்கும் பிம்பமாகவா.....
உன் கண்ணீரில் வழிந்தோடும் நிஜமாகவா.....
உன் இதயச் சோலையை நனைக்கும்
அன்பெனும் மழையாகவா......
மலர்களை கொய்தெறியும் சூறை காற்றாகவா.......
என்னவாய் இருக்கிறேன் நான் ! உன்னுள்
என்னவாய் இருக்கிறேன் நான்.
உன் மனப்பூக்களை
சுடு சொற்களால் துவம்சிக்கும் புயலாகவா.....
ஆறுதல் மொழி பேசும் தென்றலாகவா.....
உன் வாழ்க்கை நிலத்தை
மேம்படுத்தும் உரமாகவா.....
வளம் கொல்லும் திராவகமாகவா....
என்னவாய் இருக்கிறேன் நான் ! உன்னுள்
என்னவாய் இருக்கிறேன் நான்.
வாழ்க்கையைத் தடம் மாற்றிப் போடும்
சூழ்நிலைகளை கையாளும் அறிவாளியாகவா...
சூழ்நிலை கைதியாகும் முட்டாளாகவா...
உன்னை கைப்பிடித்து அழைத்துச்
செல்லும் அன்னையாகவா......
உன் கரம் பிடித்துச் செல்லும்
பிள்ளையாகவா.....................
என்னவாய் இருக்கிறேன் நான் ! உன்னுள்
என்னவாய் இருக்கிறேன் நான்.
எதுவாகினும் நினைவில்
நிற்பதே நிம்மதி.
என்னவாய் இருக்கிறேன் நான் ! உன்னுள்
ReplyDeleteஎன்னவாய் இருக்கிறேன் நான்.//எண்ணமாய் இருப்பீர்களோ?