முன்பே பிறந்து எனக்காய்
காத்திருந்தவனே………………………..
வாழ்க்கைப் பயணத்தில்
எல்லாமுமாய் இருந்தவனே……..
சுகமான சுமையாய் மனதில்
எனைச் சுமந்தவனே………………….
உனக்கானதையும் எனக்காக
விட்டுக் கொடுத்தவனே……..
உன் அரவணைப்பில் கர்ப்பத்திலிருக்கும்
பாதுகாப்பை உணரவைத்தவனே……….
எனக்காய் நீ தந்த சுகங்கள் அனைத்தையும்
இருமடங்காய் உனக்களிக்க
உனக்கு முன்னே சென்று
காத்திருக்கிறேன்…………..
ஆருயிரே……….
மணாளனாய் உன் கைப்பிடிக்க
No comments:
Post a Comment