Wednesday, January 4, 2012

பிரபஞ்ச வலம்



அழகாய்  சிறகுகள் முளைக்க
மெதுவாய் பறக்கிறேன் நான்

காடு கடந்து,மலை தாண்டி
எல்லாம் இரசித்த வண்ணம்
இனிதாய் ஒரு பயணம்.

அன்பெனும் மழையை பொழிந்த வண்ணம்
கோப வெறுப்பு மேகங்களை விலக்கிய படி
மிதக்கிறேன் வானத்தில்.

என் சிறகசைப்பிற்கு காற்றும் இசையமைக்க,
பறவைகள் கீதம் பாட
இரசித்தபடி நான்.

புருவ அசைவிற்கு மழையும் நடனமாட
மயிலும் சேர்ந்தே ஆட
மகிழ்ச்சியில் நான்.

என்னை மகிழ்விக்க வானவில்லும் வந்து சேர
வர்ணங்களை என்னுள்ளே வாங்கிக் கொண்டு
பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கறேன்.




தேவேந்திரனை மிரட்டுகிறேன்
அமுதத்தை அனைவருக்கும் பங்கிட சொல்லி

பிரம்மனுக்கு ஆணையிடுகிறேன்
ஊனமுள்ளவர்களை படைக்க கூடாது என்று

விஷ்னுவிற்கு கட்டளையிடுகிறேன்
யுத்தங்கள் இல்லாத பூமி வேண்டுமென்று

சிவனுக்கு உத்தரவிடுகிறேன்
நூறு வயது வரை யாருக்கும் சாவே கூடாதென்று

மெல்ல தேவலோகம் தாண்டி எமலோகம் பறக்கிறேன்

எமன் வந்து மண்டியிடுகிறான் என்முன்னே
எல்லோருடைய பாவங்களையும் மன்னித்துவிடு என்றேன்
சிரம் தாழ்த்தி உத்தரவு என்றான்.

பிரபஞ்சம் முழுதும் இரசித்துவிட்டு
பூமி வருகிறேன்

பஞ்ச பூதங்கள் அமைதியாய் அருள் புரிய
எங்கும் இயற்கை எழில் கொஞ்ச
துக்கமே இல்லாத மனித இனம்....
சிறகுகள் நீக்கி கலக்கிறேன் அவர்களோடு.......




No comments:

Post a Comment