மலராய் இருப்பாயென அகமகிழ்ந்திருக்க
முள்ளாய் கீறுவதேன்....
தென்றலாய் வீசுவாயென எதிர்பார்த்திருக்க
புயலாய் மாறியதேன்....
இசையாய் இருப்பாயென நானிருக்க
இடியாய் இறங்கியதேன்...
மழைச்சாரலாய் வீழ்வாயென மகிழ்ந்திருக்க
புயல் மழையாய் புண்படுத்துவதேன்...
பூமியைப் போல் பொறுமை காப்பாய் என்றிருக்க
எரிமலையாய் சீறுவதேன்...
சுபராகமாய் குளிர்விப்பாயென செவிசாய்த்திருக்க
அபஸ்வரமாய் மீட்டுவதேன்...
கலங்கரை விளக்காய் வழிகாட்டுவாயென காத்திருக்க
சுனாமியாய் தாக்குவதேன்...
கர்ப்பகிரகமாய் அருள்புரிவாயென இறுமாந்திருக்க
பொருட்காட்சி பொம்மையானதேன்...
வேறுபாடுகள் கலைவாயென கனவுகண்டிருக்க
மெளனமாய் இருப்பதேன்...
வார்த்தைகள் தொண்டையில் சடுகுடு ஆட
சோகம் இதயத்தில் நர்த்தனமாட
பேரலையில் சிக்குண்ட படகாய் புத்தி தள்ளாட
செய்வதறியாமல் மனம்...
முள்ளாய் கீறுவதேன்....
தென்றலாய் வீசுவாயென எதிர்பார்த்திருக்க
புயலாய் மாறியதேன்....
இசையாய் இருப்பாயென நானிருக்க
இடியாய் இறங்கியதேன்...
மழைச்சாரலாய் வீழ்வாயென மகிழ்ந்திருக்க
புயல் மழையாய் புண்படுத்துவதேன்...
பூமியைப் போல் பொறுமை காப்பாய் என்றிருக்க
எரிமலையாய் சீறுவதேன்...
சுபராகமாய் குளிர்விப்பாயென செவிசாய்த்திருக்க
அபஸ்வரமாய் மீட்டுவதேன்...
கலங்கரை விளக்காய் வழிகாட்டுவாயென காத்திருக்க
சுனாமியாய் தாக்குவதேன்...
கர்ப்பகிரகமாய் அருள்புரிவாயென இறுமாந்திருக்க
பொருட்காட்சி பொம்மையானதேன்...
வேறுபாடுகள் கலைவாயென கனவுகண்டிருக்க
மெளனமாய் இருப்பதேன்...
வார்த்தைகள் தொண்டையில் சடுகுடு ஆட
சோகம் இதயத்தில் நர்த்தனமாட
பேரலையில் சிக்குண்ட படகாய் புத்தி தள்ளாட
செய்வதறியாமல் மனம்...
No comments:
Post a Comment