Tuesday, December 27, 2011

கனவு கண்டோம் நாங்களும்

கனவு கண்டோம் நாங்களும் ......அன்று
நாட்டையே உருமாற்றும் ஒரு அக்னிக்குஞ்சாக....
அநியாயத்தை தட்டிக் கேக்கும் ஒரு தலைவியாக......
எல்லோரும் வியக்கும் ஒரு மனிதனாக.........
விண்ணுலகையும் ஆளும் ஓர் தேவதையாக.......

இன்றோ
காலத்தின் கைகளில் வெறும் தலையாட்டி பொம்மையாய்,
எண்ஜான் வயிற்றுக்கு இலட்சியத்தை விற்கும் மேதாவியாய்,
சுயநலமே தலைதூக்கும் குடும்ப தலைவியாய்,
போராட்டமே இல்லாத மண்புழுவாய்.

நதி நீரில் மிதக்கும் இலைபோல
எதிர்த்து போரிடவும் எண்ணமின்றி
கழிகிறது காலம்.......
இன்னும் கனவுகளுடனே.......

No comments:

Post a Comment