Friday, August 26, 2011

முதுமை பருவம்




அன்பிற்காக ஏங்கியபடி,
குழந்தைகளின் அலைப்பேசிக்காக காத்திருந்தபடி,
பேரப்பிள்ளைகளின் வருகைக்காக தவமிருந்தபடி,
அர்த்தம் தெரியாமல் வாழ்ந்த
வாழ்க்கையை அசைப்போட்டப்படி,
வெள்ளை முடியின் கம்பீரத்தை ரசித்தப்படி,
இளமையின் வேகத்தில் ஓடும் மனிதர்களை
பார்த்து மெளனமாக புன்னகைத்தபடி,
சுருங்கிய தோல்களை,தளர்ந்த நடையை
பார்த்து இது தான்தானா என்று வியந்தபடி,
கேட்பார் யாருமில்லை எனத்தெரிந்தும்
அறிவுரை வழங்கியபடி,
ஆசைகளை அடக்கியபடி.......
மரணத்தை எதிர்பார்த்தபடி...........

No comments:

Post a Comment