Friday, August 26, 2011

எனது தோட்டத்தில் மயில்

முதன்முறையாக அமைந்தது ஒரு மயிலின் வருகை
எனது தோட்டத்தில்

எனக்காக தோகை விரித்து ஆடியபடி மயில்
அதன் அழகில் மயங்கியபடி நான்
மனதின் ஓரத்தில் அதன் வருகை மீது சந்தேகம் தோன்ற
பாராமுகமாய் நான்
சென்றது சிலகாலம் இப்படியே

ஓர் நாள் அமைந்தது சொந்தங்களின் வருகை
எனது தோட்டத்தில்

அவர்களுக்காக தோகை விரித்து ஆடியபடி மயில்
மனதின் ஓரத்தில் பொறாமை தீ எரிய
பாராமுகமாய் நான்
சென்றது சிலகாலம் இப்படியே

சுற்றத்தினர் எல்லோரும் மயிலை புகழ
அவர்களின் அன்பில் மயில் திளைக்க
மனதின் ஓரத்தில் பிரிவின் பயம் எழ
பாராமுகமாய் நான்
சென்றது சிலகாலம் இப்படியே

எனது உணர்வுகள் அத்தனையும் ரசித்தபடி
என்னை மகிழ்விப்பது ஒன்றே வேலையாய்
தோகை விரித்து ஆடியபடியே மயில்

மெதுவாய் மயிலின் அருமை உணர்ந்தது மனது
அதற்கு ஏற்ற இடம் இது இல்லை என்று தெளிந்தது
மனதில் அன்பு வழிய ,அதன் நலம் கருதி
இன்றும் பாராமுகமாய் நான்.

No comments:

Post a Comment