Friday, August 26, 2011

என் மகன்



என் உலகத்து சூரியன் அவன்.
அவனை சுற்றியே எனது வாழ்க்கை.
அவனுக்காகவே எனது ஒவ்வொரு செயலும்.
ஒவ்வொரு நொடியும் அவனது
குறும்புகளை இரசித்தபடி,
வளர்ச்சியை வியந்தபடி,
செல்ல சண்டைகள் போட்டபடி,
கால கடிகாரம் நகர்கிறது மெதுவாய்.
வற்றாத சுனைநீராய் எனது அன்பு.
வார்த்தைகள் போதவில்லை சொல்ல,
செயல்களாலும் முடியவில்லை
முழுதாய் உணர்த்த.
மலைத்து நிற்கிறேன் செய்வது அறியாது.
கண்களில் வழியும் பாசத்தை உணர்ந்த மகனோ
அழகாய் புன்னகைக்க
அதில் மெய்மறந்தபடி நான்.

No comments:

Post a Comment