Friday, August 26, 2011

அவள் இவள்





அவள் இதமான தென்றல்
இவள்  அழகான சூறாவளி

அவள் அமைதியான நதி
இவள் காட்டாற்று வெள்ளம்

அவள் கோபத்தையே அறியாதவள்
இவள் கோபத்தையே சுவாசிப்பவள்

அவள் எதையும் நம்புபவள்
இவள் எதையும் சந்தேகிப்பவள்

அவள் அன்பு இதமான மழை
இவள் அன்பு புயல் மழை

அவளிடம் தாயின் பொறுமை
இவளிடம் குழந்தையின் பிடிவாதம்

அவளின் கோபத்திலும் மென்மை இருக்கும்
இவளின் அன்பிலும் வன்மை இருக்கும்

அவள் தோல் கூட இனிக்கும் மாங்கனி
இவள் முள் கொண்ட அன்னாச்சி

அவள் கைப்பிடித்து இவள்
இருவரும் இணை பிரியா தோழிகள்

No comments:

Post a Comment