தூக்கம் தான் இதன் ஒத்திகையோ
தவம் தான் இதன் முன்னுரையோ
அறிந்திட்ட சித்தர்களும் மெளனம் காக்க
அறியாத பலபேர் விளக்கம் சொல்ல
குழப்பத்தில் எனது மனம்
சில மரணங்கள் மனம் கலங்கடிக்க
சில மரணங்கள் பயம் எழுப்ப
சில மரணங்கள் பாடம் புகட்ட
மரணபயத்தை மனம் ஆராய
காரணமாய் மன்னவனின் முகமும்,
மகனின் முகமும் கண்முன் விரிய
அவர்களுக்காய், அவர்களுடன் வாழும் ஆசை எழ
மரணத்தை பயத்துடனே பார்க்கும் பலபேரில்
ஒருத்தியாய் நான்
No comments:
Post a Comment