கொன்று விடு மனதின் வெறுமைகளை
மனிதன் வாழ்வு சில நாளாம்
அதில் உணர்வுகள் தான் எத்தனை
எல்லாவற்றிக்கும் ஆசைப்பட்டு
எல்லா நிலையிலும் போராடி
நினைத்தது கிடைக்கும்பொழுது
எத்தனை வெறுமைதான் மனதினில்
மகிழ்ச்சியான தருணத்திலும் வெறுமை
இகழ்ச்சியான தருணத்திலும் வெறுமை
கவலையான தருணத்திலும் வெறுமை
வெறுமை கொல்ல வழியேதும் உண்டோ இப்பாரினிலே
தாமரை இலை தண்ணீர் போல
வாழ்ந்து என்ன பயன் இவ்வுலகினிலே
தெரியவில்லை எல்லாம் முழுதாய் அனுபவிக்க
முயற்சித்தும் முடியவில்லை
இது வரமா சாபமா
அதுவும் தெரியவில்லை
வாழ்நாள் முழுதும்
வழிகாட்டும் குருவிற்காக ஏங்கியபடி
என் பயணம்....................
No comments:
Post a Comment