Saturday, August 27, 2011

இன்னும் எத்தனை காலம்


 
சுயசிந்தனையற்ற ஆட்டுமந்தையாய்
இருக்கும் எண்ணத்தோடு

பணத்திற்க்காக தனது சுயத்தை
இழக்கும் எண்ணத்தோடு

துக்கமோ,துரோகமோ  நம் வீட்டு கதவை
தட்டினால் மட்டுமே போராடும் எண்ணத்தோடு

வீட்டைச் சுற்றி வறுமை இருந்தாலும் தான்
மட்டும் அறுசுவை உண்ணும் எண்ணத்தோடு

தனது தலைமுறைக்கு பணத்தை மட்டுமே
சொத்தாக சேர்த்தால் போதும் என்ற எண்ணத்தோடு

மற்றவர்களின் தியாகங்களிலே நமது
வாழ்க்கையை அனுபவிக்கும் எண்ணத்தோடு

சுற்றுச் சூழல் பற்றி சிறிதும் கவலையில்லாமல்
தன் செளரியத்தையே முன்னிருத்தும் எண்ணத்தோடு

இன்னும் எத்தனை காலம்
இருக்க போகிறோம் இப்படியே.........

சிந்திப்போம்......செயல்படுவோம்.............
மாற்றத்திற்கான முதல் அடி நமதாக இருக்கட்டும்.


No comments:

Post a Comment