Friday, August 26, 2011

புத்தியும் மனமும்






மனம் எங்கு சென்றாலும்
புத்தியும் சென்றது
பாதுகாப்பிற்காக............

சில இடங்களில் தனியாக
செல்ல விரும்பியது மனது.
கடும் எதிர்ப்பு புத்தியிடமிருந்து

புத்தி செய்த எச்சரிக்கையை
மீறி சென்றது மனம்........
கவச குண்டலம் இல்லாத கர்ணன்
நிலமை ஆனது மனதிற்கு…........

குற்றுயிரும் குலை உயிருமாய்
மனம் வந்தது திரும்பி........
மனதை மெதுவாய் தேற்றியது புத்தி

 இன்று புத்தி எனும் ஆமைகூட்டில் மனம்
எதுவும் பாதிக்காமல்......
எதையும் சிந்திக்காமல்..........
எதற்கும் கவலைபடாமல்.......
பாதுகாப்பாய்...........

1 comment:

  1. அன்பின் அனிதா ராஜ்

    மனமானது புத்தியின் கீழ் தான் பணி புரிய வேண்டும் என்பது நல்ல சிந்தனை. கற்பனை அருமை - கவிதை அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete